தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் (National Translation Mission - NTM www.ntm.org.in) முதல் தமிழ் வெளியீடான கிஸ்பெர்ட் எழுதிய சமூகவியலின் அடிப்படைகள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி அவர்களால், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின்(CIIL) இயக்குநர் பேரா. அவதேஷ் குமார் மிஸ்ரா முன்னிலையில் 25.05.16 அன்று லக்னோவில் வெளியிடப்பட்டது. NTMஇன் மைய ஒருங்கிணைப்பு நிறுவனமான CIIL உருவாக்கிய பாரதவாணி வலைவாசல் மற்றும் செயலியைத் (www.bharatavani.in) துவக்கிவைக்கும் நிகழ்ச்சி லக்னோவிலுள்ள பாபாசாஹிப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் 2016 மே 25ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக NTM பல்வேறு மொழிகளில் உருவாக்கியுள்ள பத்து மொழிப்பெயர்ப்புகளும், டிரான்ஸ்லேஷன் டுடே ஆய்விதழும் வெளியிடப்பட்டன. இவ்விழாவில் பாரதவாணி திட்டத்தின் தமிழ் ஆலோசகர் குழு, NTMஇன் திட்ட ஆலோசனைக்குழு ஆகியவற்றின் உறுப்பினரான மதுரைக் காமராசர் பலகலைக்கழகத்தின் பேரா. ரேணுகாதேவி (ஓய்வு) சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. நூல் விவரம்: சமூகவியலின் அடிப்படைகள் மூலநூல்: Fundamentals of Sociology ஆசிரியர்: பா. கிஸ்பெர்ட், சே. ச. (P. Gisbert, S. J.) மொழிபெயர்ப்பாளர்: க. பூரணச்சந்திரன் வெளியீடு: தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு நூலின் பின்அட்டையிலிருந்து... கிஸ்பெர்ட் எழுதிய இந்நூல் சமூகவியலின் வரையறை, முறைகள், அடிப்படைக் கருத்துகள் ஆகியவற்றிற்கான ஓர் அறிமுகம் ஆகும். சமூகத்தின் தோற்றமூலங்கள், அமைப்புகளைப் பிற சமூகவியல்களுடன் தொடர்புபடுத்திச் சமூகக் குழுக்களையும் கற்பதற்கான ஆயத்த ஏற்பாடுகளை இந்நூல் அளிக்கிறது. இவ்வாறு செய்யும்போது, சமூக அமைப்பின் மிக முக்கிய முகப்புக்கூறான சமூக நிறுவனங்கள் தங்கள் பலவேறு வடிவங்களில் சமூகவயப்படுத்தலின் மற்றும் சமூகக் கட்டுப்பாட்டின் முகவர்களாகச் செயல்படும் தன்மைக்குள் சென்று ஆசிரியர் காண்கிறார். சமூகவியலின் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி விளக்கியவாறு, இந்த நூல் * சமூகப் பரிணாமம் மற்றும் முன்னேற்றம் பற்றிய கேள்விகள் * பாரம்பரியம், சூழல், ஆளுமை ஆகியவற்றின் பங்கு * இனப்பிரச்சினைகள், சமூக அடுக்கமைவு, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் முறைமை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள அக்கறைகள், மற்றும்- * பொருளாதார ஒழுங்கமைவு, தொழில்துறை, மக்கள் பெருக்கம், உணவு அளிப்பு ஆகியவற்றில் நிகழ்ந்துள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஆகியவற்றின்மீது கவனத்தைக் குவிக்கிறது. எளிய சுருக்கமான நூல் என்பதால், சமூகவியல் துறைக்கல்வியின்மீது நான்கு தசாப்தங்களாக திட்டமான செல்வாக்கினை உடையதாக விளங்குகிறது. இந்நூல் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து பயன்படுவது தொடரும். ஆசிரியரைப் பற்றி... மும்பை செயின்ட் சேவியர் கல்லுட்ரியில் சமூகவியல் துறையின் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றியவர் பி. கிஸ்பெர்ட். லண்டன் பெரருளாதார மற் றும் அரசியல்-அறிவியல் புலத்திலும், பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிசெளரி யில், செயின்ட் லுட்யிஸ் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் நிறுவனத்திலும் அவர் சமூகவியல் பயின்றார். அச்சமயத்தில் மிசெளரியில் உள்ள ராக்ஹஸ்ட் கல்லுட்ரியில் இளநிலைப் பட்ட மாணவர்களுக்கு வருகைப் பேராசிரியராகவும் இருந்தார். ஸ்பானிஷ், ஆங்கில வெளியீடுகள் பலவற்றுக்கு கிஸ்பர்ட் கட்டுரைகள் அளித்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளரைப் பற்றி... க. பூரணச்சந்திரன், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். திறனாய்வுத் துறை, குறியியல், சூழலியல், இதழியல், மெரழிபெயர்ப்பு எனப் பல துறைகளில் ஆர்வமிக்கவர். பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். பல துறைகளையும் சார்ந்த இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நூல்களை மெரழிபெயர்த்துள்ளார். அவற்றுள்: உலகமயமாக்கல், பின்நவீனத்துவம், இசை - மிகச் சுருக்கமான அறிமுகம், நள்ளிரவின் குழந்தைகள் (சல்மான் ருஷ்டியின் Midnight's Children), நெரருங்கிய குடியரசு (அருந்ததி ராயின் The Broken Republic), இந்துக்கள் - ஒரு மாற்று வரலாறு (வெண்டி டேரனிகரின் The Hindus: An Alternate History) பேரன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். உள்ளடக்கம் பகுதி 1 சமூக வாழ்க்கையின் வேர்கள்
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (National Translation Mission - என்டிஎம்) என்பது மொழிபெயர்ப்பை ஒரு தொழில்துறையாக உருவாக்கவும் அறிவுசார் நூல்களை மாணவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதன் மூலம் உயர்கல்வியை எளிதாக்கவும் இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். மொழித்தடைகளைக் கடந்த அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கம். மொழிபெயர்ப்பு வாயிலாக அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள அனைத்து இந்திய மொழிகளிலும் அறிவை எடுத்துச் செல்லுதல் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் இலக்காகும். கீழ்காணும் பல்வகை முயற்சிகளும் இதில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன: • மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயிற்சி • மொழிபெயர்ப்புகளை வெளியிட வெளியீட்டாளர்களை ஊக்குவித்தல் • வேற்று மொழிகளிலிருந்து இந்திய மொழிகளிலும், இந்திய மொழிகளிலிருந்து வேற்று மொழிகளிலும் மேலும் இந்திய மொழிகளுக்கிடையேயும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களுக்கான தரவுத்தளங்களை உருவாக்கிப் பராமரித்தல் • மொழிபெயர்ப்பு தொடர்பான அனைத்துத் தகவல்களுக்குமான ஒரு தகவல் பரிமாற்ற மையமாக உருவாகுதல் இப்படிப்பட்ட முயற்சிகளின் வாயிலாக, இந்தியாவில் மொழிபெயர்ப்பை ஒரு தொழிற்துறையாக உருவாக்கும் பணியில் என்டிஎம் முனைந்துள்ளது. மொழிபெயர்ப்புக்கள் புதிய கலைச்சொற்களும் உரையாடல் பாணிகளும் உருவாக வழிவகுக்கும். மொழிகளை நவீனப்படுத்துதலும் இதனால் எளிதாகவும் இயற்கையாகவும் நிகழும். இவ்வகை நவீனப்படுத்துதலில், குறிப்பாக, இந்திய மொழிகளில் கல்விசார் உரையாடல் பாணிகளின் நவீனப்படுத்துதலில், மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. அறிவுசார்நூல்கள் மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பை ஒரு தொழிற்துறையாக உருவாக்கும் இலக்கை அடைவதற்கான முதற்படியாகும். இதில் அறிவைப் பரப்புவதற்கு உதவும் அனைத்து எழுத்திலக்கியங்களும்/நூல்களும் என்டிஎம்மில் ‘அறிவுசார் நூல்கள்’ என்றறியப்படும் தொகுதியினுள் அடங்கும். உயர் கல்வியில் கற்பிக்கப் பயன்படுத்தப்படும் நூல்களை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதில் என்டிஎம் தற்சமயம் ஈடுபட்டுள்ளது. பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்ககூடிய உயர்கல்வி நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதின் மூலம் பூட்டிக்கிடக்கும் அறிவுப் புதையலை அகழ்ந்து கொடுப்பதும் பரவச்செய்வதும் என்டிஎம்மின் எண்ணம். அனைவரையும் அகப்படுத்திய ஒரு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இது வழிவகுக்கும் என்பதும் இதில் எதிர்பார்க்கப்படுகிறது. திட்ட இயக்குநர்: பேரா. வே. சரத்சந்திரன் நாயர் இவ்விவரம் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் http://www.ntm.org.in/ இணையதளத்திலிருந்து பெறப்பட்டது.
0 Comments
Leave a Reply. |